பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம்! ( சினிமா செய்தி )

Read Time:2 Minute, 39 Second

செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்துள்ளார்.

அதில், “வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.

அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன்.

எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேசுவது பற்றி….!! (கட்டுரை)
Next post மூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் !! (உலக செய்தி)