கிளிநொச்சியில் நோர்வே து}துவரிடம் புலிகள் தெரிவிப்பு
Read Time:1 Minute, 2 Second
இலங்கை அரசாங்கம் மக்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்துமானால், சமாதான பேச்சுக்கள் தொடர்பாக இணத்தலைமை நாடுகள் வெளியிட்ட தீர்மானம் குறித்து தாங்கள் சாதகமாக பரிசீலிக்கம் சாத்தியமிருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வே து}துவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேச்சக்கள் நடத்தினர் இந்தச் சந்திப்பு நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் சமாதான செயலகத்தில் நடைபெற்றது.