தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்!! (உலக செய்தி)
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating