முதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 53 Second

யோகா செய்யும் போது வெறும் தரையில் அமரக்கூடாது. பாயோ அல்லது துணியோ பயன்படுத்தி யோகா செய்யலாம். சில பயிற்சிகளை செய்யும் போது பயிற்சியாளர் அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதல் படி செய்வது நல்லது.

உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனங்களில் முக்கியமானது பட்டாம்பூச்சி ஆசனம். இதை செய்யும் போது கால்கள் இரண்டும் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல அசைவதால் பட்டாம்பூச்சி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.

முதலில் கால்களை நீட்டி அமரவேண்டும். இரு பாதங்களும் ஒன்றுடன் ஒன்று படுமாறு வைத்து நிமிர்ந்து உட்கார வேண்டும். மெதுவாக இரு முழங்கால்களையும் கைகளால் 10 தடவை தடவி விடவும். பிறகு கால்களை மேலும் கிழுமாக பட்டாம்பூச்சி இறக்கையை அசைப்பது போல அசைக்கவும். மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகப்படுத்தலாம். சிறிது நேரம் ஓவ்வெடுத்தபிறகு மீண்டும் ஐந்து தடவை முதல் 10 தடவை செய்யலாம்.

நன்மைகள்

கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். விளையாட்டில் வேகமாக ஓட முடியும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு நல்ல பலன் தரும். கால் தசைகள் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகெலும்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவு ஒரு பிரச்னை இல்லை!!(அவ்வப்போது கிளாமர்)
Next post தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)