நிலச்சரிவில் 10 பேர் பலி – மேலும் 10 பேர் மாயம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 14 Second

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கபட்டன. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதையடுத்து, நிலச்சரிவில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? (கட்டுரை)
Next post சன்னி லியோனை பாட வைக்கும் முயற்சி செய்யும் இசையமைப்பாளர்!! ( சினிமா செய்தி)