எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!

Read Time:1 Minute, 40 Second

* பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம்.

* ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது.

* பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை என பல பிரிவுகள் உண்டு.

* பிரண்டையினால் வயிற்றுவலி, ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வரும் நோயான ரத்த மூலம், மூளை மூலம் மற்றும் கைகால் உளைச்சல் நீங்கும். பசி உண்டாகும்.

* பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து, மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும்.

* பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம், ரத்தக்கட்டு குணமாகும்.

* எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கிறது.

* பிரண்டை, இலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கள் விதை, ஓமம் இவைகளை முறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்றுப்புழுக்கள் நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடிபாவிங்களா இப்படியா பண்ணுவீங்க!! (வீடியோ)
Next post அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை ! (மகளிர் பக்கம்)