தொழிற்சாலையில் வெடிவிபத்து – 7 பேர் பலி!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 6 Second
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்றும், வெடிவிபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.
ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள 2வது மிகப்பெரிய வெடிவிபத்து இது. மார்ச் 21-ம் தேதி யான்செங் நகரில் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
Average Rating