நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 46 Second

தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ்-க்கும், மியான் பைசல்-க்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அந்த பெண் மொட்டையடிக்கப்பட்ட தலையுடனும், களையிழந்த முகத்துடனும் பரிதாபமாக பேசியுள்ளார். அதில், கணவர் மற்றும் அவரது நண்பர்களின் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததற்காக தன்னை கணவர் துன்புறுத்தியதாக வீடியோவில் ஆஸிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் என்னுடைய ஆடைகளை வீட்டு பணியாளர் முன் அகற்றி, அவரைக் கொண்டு என்னை பிடிக்கவைத்து தலை முடியை ஷேவ் செய்து பின்னர் அதை தீயிட்டு கொழுத்தியதாக கணவர் மீது ஆஸிஸ் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆஸிஸின் கணவர் மற்றும் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டை பைசல் முழுமையாக மறுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் !! (கட்டுரை)
Next post மீண்டும் பிரதமராக மோடி? கருத்து கணிப்பில் தகவல்!! (உலக செய்தி)