மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்!!
Read Time:1 Minute, 1 Second
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று (07) கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தலைமறைவாகி உள்ளதுடன் பொலிஸார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating