இரத்த பரிசோதனையிலேயே கருவக புற்றுநோயை கண்டறியலாம்!! (மருத்துவம்)
கருவக புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவக புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 46ஆயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி கருவகப் புற்றுநோயை கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவைிட இரத்தப்பரிசோதனை மூலம் இரண்டு மடங்கு துல்லியமாக கருவகப்புற்றுநோயை கண்டறியமுடியும் என்று தெரியவந்திருக்கிறது.
அதே சமயம் கருவகப்புற்றுநோய் பாதிக்கப்படுபவர்களின் உயிரை பாதுகாக்கும் அளவுக்கு இந்த நோயின் துவக்கத்திலேயே இரத்தப் பரிசோதனைகள் மூலம் துல்லியமாக கண்டறிய முடியுமா என்பது குறித்து மேலதிக சோதனைகள் நடத்தபடவேண்டியது அவசியம் என்றும் இந்த பரிசோதனைகளை மேற்கொண்ட லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
Average Rating