குழந்தை பேறு அடைய சிகிச்சை முறைகள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 8 Second

திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காததற்கு இருவரிடமோ அல்லது ஒருவரிடமோ குறைகள் இருக்கலாம். 10 சதவீத பேருக்கு விந்தணுக்களின் குறைபாடு, விந்து வெளியேற தடை, பால்வினை நோய், கருமுட்டை உற்பத்தி குறைபாடு, கருவுறுப்பில் அழற்சி, ஹார்மோன் பிரச்னை உள்ளது. இதில் எந்த பிரச்னை, யாருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை முறையாக பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கு உரிய சிகிச்சை மேற்கொண்டால் நல்ல முறையில் குழந்தை பேறை அடையலாம்.

குழந்தை பேறில்லாதவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஆண்டிற்குள் குழந்தை பிறக்கவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தை பேறின்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், விந்தணு சுத்திகரிப்பு முறை மூலம் ஆணின் விந்தை லேப்பில் பரிசோதித்து, அதில் நல்ல அணுக்களை தேர்வு செய்து, அதை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவதன் மூலம் ஆணின் குறை நீக்கப்படுகிறது. குழந்தை பேறு கிடைக்கும். இது விந்தணு சுத்திகரிப்பு முறையாகும்.

பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து, லேப்பில் பராமரித்து, அதில் ஆணின் உயிரணுக்களை ஊசி மூலம் செலுத்தி இன்குபேட்டரில் 3 நாள் வைத்திருந்தால் அது கருவாகி வரும். பின்னர் அதை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தை பேறு பெறலாம். இது முட்டைக்குள் உயிரணு செலுத்தும் முறை (ஐசிஎஸ்ஐ)யாகும். ஆணின் உயிரணுக்களை பெண்ணின் உறுப்பிலிருந்து பயாப்சி மூலம் எடுத்தும், கரு, முட்டையை வெளியே எடுத்தும் தனித்தனியாக உறைவிந்து, உறை கரு, உறை முட்டை முறையில் எவ்வளவு நாள்களுக்கு வேண்டுமானாலும் பாதுகாத்து வைக்கலாம். பின்னர் தேவைப்படும் போது அதை இணைத்து 5 நாள் வளர்க்க வேண்டும்.

அது நன்றாக வளர்ந்த பின்னர் பெண்ணின் கருப்பையில் வளர்த்து குழந்தைபேறு பெறலாம். இது உறைவிந்து முறை(டிஇஎஸ்ஏ)யாகும். பெண்ணின் கருப்பையில் குழந்தை பேறுக்கு வாய்ப்பில்லாவிட்டால் பெண்ணின் கரு, முட்டையை தனியே எடுத்தும், ஆணின் விந்தணுவை தனியாக எடுத்து இரண்டையும் ஒன்று சேர்த்து சில நாள்கள் லேப்பில் வளர்த்து, பின்னர் அது நன்கு வளர்ந்த பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் முழுமையாக வளர்த்து இயற்கை முறையிலோ, சிசேரியன் முறையிலோ குழந்தை பெறுவது.

இது வேறொரு பெண்ணின் கருப்பையில் வளர்ந்தாலும் தம்பதியின் கரு, முட்டை, விந்தணுவால் குழந்தை உருவாகிறது. இது வாடகை தாய் முறையாகும். இதுபோல் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. குழந்தை பேறு குறைபாடு யாரிடம் உள்ளது என்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை முறைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்! (மகளிர் பக்கம்)
Next post கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…!! (அவ்வப்போது கிளாமர்)