எக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்!! (மகளிர் பக்கம்)
எக்ஸ்ட்ரீம் மேக்கப் நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இது குறித்து மேலும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எக்ஸ்ட்ரீம் நிறுவனத்தைச் சேர்ந்த சர்வதேச மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் பயிற்சியாளரான நிஷா ரோய். “சென்னையை அடிப்படையாகக் கொண்ட எங்கள் நிறுவனத்திற்கு துபாயிலும் ஒரு கிளை உள்ளது. சிறந்த அழகியல் நிபுணர்கள் மற்றும் புதுவிதமான டெக்னிக்குகளினால் சிறந்த சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறோம். மணப்பெண்களுக்கான சிறந்த மேக்கப் இங்கு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட முறையில் அவர் தம் வாழ்நாளில் சிறந்த நாளான மணநாளுக்கான மேக்கப் என்பதால் அதில் அவர்களுக்கு அதீதமான எதிர்பார்ப்பு இருக்கும். தான் அன்று எல்லாரையும் விட அழகாக விளங்க வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான ஆசையாக இருக்கும். அதனால் ப்ரைடல் மேக்கப்பிற்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாதாரணமாக மேக்கப் செய்யாமல் மணப்பெண்ணின் நிறம் மற்றும் அவர்களின் தோலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து கவனத்து மேக்கப் செய்யப்படுகிறது. கஸ்டமர்களின் கம்ஃபோர்ட் மற்றும் மணப்பெண் முகத்தில் காணும் மகிழ்ச்சிக்கு தான் எங்கள் நிறுவனம் முதலிடம் கொடுக்கிறது.
கல்யாண மேக்கப் தவிர்த்து நிச்சயதார்த்த மேக்கப், கல்யாணத்திற்கு முன்பான மேக்கப், பார்ட்டி மேக்கப், வித்தியாசமான ஹேர் ஸ்டைல்ஸ் பல விஷயங்களை அளிக்கிறோம்.மேக்கப் மட்டுமில்லாமல் மேக்கப் செய்வதற்கான பயிற்சியும் இங்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் குறைந்த முதலீட்டில் மேக்கப் செய்வதற்கான பயிற்சி பெற்று சுயமாக சம்பாதிக்க வழி செய்கிறோம். ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மேலும் மணப்பெண் மேக்கப்பை ரூபாய் 9999/- க்கு வழங்குகிறோம். இந்த சலுகைகளை பயன்படுத்தி அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் சர்வதேச மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் பயிற்சியாளரான நிஷா ரோய்.
Average Rating