ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 6 Second

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்

பருவைத் தடுக்க எளிய வழிகள்

பருவத்தில் தோன்றி முக அழகைப் பாதிக்கும் பருவை அழகு நிலையங்கள் வழியாக எப்படி நீக்குகிறார்கள் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இனி நமது வீடுகளில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகப்பருவை நீக்கும் வழிமுறைகளை பார்ப்போம். முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் முகப்பரு மூலமாக தோலில் ஏற்படும் தழும்புகளைப் போக்குவதற்கு சந்தைகளில் பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன.

ஆனால் அவை அனைத்தும் முகப்பருவை நீக்குகின்றனவா, வராமல் தடுக்கின்றனவா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் பலர், ‘என் முகத்தில் ஒரே ஒரு பருதான் இருந்தது. இந்த முகப்பூச்சை வாங்கிப் போட்ட பிறகு சரியாகிவிட்டது’ என்பர். வேறு சிலரோ ‘இதற்கு முன்பு எனக்கு முகப்பருவே இல்லை. இந்தக் க்ரீமைப் போட்டபிறகுதான் முகப்பரு வந்திருக்கிறது’ என்பர்.

இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து தப்பித்து, நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை எப்படி நீக்குவது என்பதைக் காண்போம். பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும்.

பாக்டீரியா வழியாக தோலில் வரும் ஒருவிதமான வீக்கம்தான் பரு என அழைக்கப்படுகிறது. சுத்தத் தமிழில் இதற்கு மெழுகு சுரப்பி என்றொரு பெயருண்டு. நமது சருமத்தில் எண்ணைத் தன்மை அதிகமாகி சருமத்தில் உள்ள மிக மெல்லிய துளை வழியாக சுரக்கும். அதிகமாக சுரக்கும் எண்ணைப் பசை அழுக்குத் துகள்களுடன் இணைந்து, துளைகளை அடைத்துக் கொண்டு வெளியேற வழியின்றி தோலில் வீக்கம் தோன்றுகிறது.

இதையே முகப்பரு என்கிறோம். இந்த முகப்பருவை சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வீட்டிலேயே சரிசெய்ய முடியும். துவக்கத்தில் இளஞ்சிவப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றும் முகப்பரு, இரண்டொரு நாள் இடைவெளியில் சிறிய அளவில் சீழ் கட்டத் துவங்கும். சீழ் நிறைந்த கட்டி கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி வலியோடு ரத்தமும் சீழுமாக உடையத் துவங்கும்.

முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும். அழகு நிலையத்திற்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே சுயமாகப் ஃபேசியல் எடுக்க நினைப்பவர்கள் செய்யக் கூடாதவை:

* முகத்தில் பரு இருக்கிறது என்றால் முகத்தை ஸ்க்ரப் செய்யக் கூடாது.
* முகத்திற்கு அதிகமாக அழுத்தி மசாஜ் கொடுத்தல் கூடாது.
* ஸ்க்ரப் க்ரீம், மசாஜ் க்ரீம் போன்றவைகளை முகத்தில் அதிகம் பயன்படுத்துதல் கூடாது.
* பருவை அழுத்துவது, உள்ளிருக்கும் சீழை எடுக்க முயற்சி செய்யும் செயல்கள் தோலை பாழ்படுத்தும். பரு வந்த இடம் பள்ளமாகும்.

இனி எளிதில் நம் கைகளுக்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு முகப்பருவை நீக்குவது என்பதைக் காண்போம்:

கற்றாழை

இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பேக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.

சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.

டீ ட்ரீ ஆயில்

இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான். தமிழில் தேயிலை மர எண்ணை என அழைக்கப்படுகிறது. டீ ட்ரீ ஆயில் கிட்டில் துளசியும் சேர்ந்திருக்கும். அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் இது கிடைக்கும். எந்த ஒரு ப்ராடக்டையும் ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் தோலிற்கு மிகவும் நல்லது. நல்லெண்ணையும் தோலிற்கு மிகவும் நல்லது.

நல்லெண்ணையுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.

ஜாதிக்காய்

அந்தக் காலத்தில் பரு வந்தால் பெரும்பாலும் பெண்கள் ஜாதிக்கா யைத்தான் பயன்படுத்துவார்கள்.இது தோலுக்கு மிகவும் நல்லது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முழு ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.

வால் மிளகு

வால் மிளகை பொடியாக்கி, பரு இருக்கும் இடத்தில் போட்டால் பருக்கள் விரைவில் கட்டுக்குள் வரும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நலங்கு மாவில் ஜாதிக்காய், வால் மிளகு போன்றவை கட்டாயம் இருக்கும். இது தோலுக்கு மிகவும் நல்லது. பரு இருந்தால்தான் இதை முகத்தில் போட வேண்டும் என்றில்லை. சாதாரணமாக இவற்றைப் பயன்படுத்தினாலே தோலுக்கு நல்லது. தோல் பிரச்சனைகள் வராமல் நமது தோல் மிகவும் பாதுகாப்பாய் இருக்கும்.

இளநீர் மற்றும் நுங்கு

முகப்பருவுக்கு சிறந்த தீர்வு இளநீரும், நுங்கும். நுங்கு சுளையை வேர்க்குரு வந்த இடத்தில் தடவினால் சரியாகிவிடும். அதேபோல் முகத்தில் வரும் பருவுக்கு இளநீர் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இளநீர் உலர்ந்து தோலை உள்நோக்கி இழுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். முகத்தில் மெலிதாக பேக் போட்டது போன்ற உணர்வு இருக்கும். இளநீரை நமது தோல் நன்றாக உள் வாங்கிய பிறகு, முகத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

அதன் பிறகு நம் தோலைத் தொட்டுப் பார்த்தால் மிகவும் நெகிழ்வான தன்மையுடன் இருக்கும். பரு வருவது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பசி, தாகம், தூக்கம், உடல் உபாதைகள், கழிவுகளை வெளியேற்றுதல் என உடல் இயல்பாகவே ஒவ்வொன்றையும் நமக்கு அறிவுறுத்தும். எப்போதெல்லாம் நமக்கு தண்ணீர் அருந்துவதற்கான உணர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கட்டாயமாகத் தண்ணீர் குடித்தல் வேண்டும். தண்ணீர் குடிக்காமலே இருப்பது முற்றிலும் தவறான செயல். தண்ணீர் குடிப்பது தோலிற்கு மிகவும் நல்லது.

எப்போதும் நம் அருகில் தண்ணீர் பாட்டில் இருத்தல் வேண்டும். முறையாகத் தண்ணீர் அருந்தாத நிலையில், உடலின் உள் மற்றும் வெளியுறுப்புக்களில் பிரச்சனைகள் தோன்றத் துவங்கும். ஏ.சி. பொருத்தப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதைப் பற்றி நினைப்பதில்லை. இவர் களுக்கு அடிக்கடி வயிற்றுவலி பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் தவிர்த்து பழம், காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை உண்பதும் தோலுக்கு மிகவும் நல்லது.

அடுத்த இதழில்…
Ø முகத்தில் தோன்றும் மங்கு வருவதற்கான காரணம்?
Ø 30 வயதைக் கடந்தவர் களுக்கு மங்கு ஏன் வருகிறது?
Ø அதை எப்படி நீக்குவது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இதயம் காக்கும் நிலக்கடலை..! (மருத்துவம்)