த.தே.கூ பா.உக்கள் சந்திக்க முயற்சிக்கவில்லை- தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி
இருவார காலமாக இந்திய அரசின் தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியாவில் முகாமிட்டிருந்த த.தே.கூ எம்.பிக்கள் “தவமாய் தவமிருந்தும்” இந்திய பிரதமரையோ, தமிழக முதலமைச்சரையோ சந்திக்கவில்லை. இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தெரிவிக்கையில்….
கேள்வி:- இலங்கை தமிழ் எம்பிக்கள் உங்களை சந்தித்தார்களா?
முதல்வர்: யாரும் சந்திக்கவில்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.
கே: அந்த தரப்பில் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறதே?
முதல்வர்:- இதற்குப் பெயர்தான் “சால்ஜாப்”. என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
கே: முயற்சித்தால் சந்திப்பீர்களா?
முதல்வர்: இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
.கே: இலங்கையில் நாளுக்குநாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
முதல்வர்: இந்த கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்தும் இதற்கு பதில் இல்லை.