பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பிராந்திய வல்லரசான இந்தியா சார்க் மாநாட்டின்போது உடன்பாட்டுக்கு வந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அமைச்சர் கெஹெலிய இங்கு சுட்டிக்காட்டினார். இதேவேளை மடுத்தேவாலயத்தை இராணுவம் ஆலய நிர்வாக சபையிடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply