நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 53 Second

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், மற்றும் ஊழியர்கள் மீது கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகும்படி நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் நக்கீரன் கோபால் உள்பட 5 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு, எழும்பூர் கோர்ட்டின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதை செய்தால் தெய்வ சக்தி நம் வீட்டிற்குள் வரும்…!!! (வீடியோ)
Next post பேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்!! (உலக செய்தி)