சிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை !! (உலக செய்தி)
திரிபுரா மாநிலத்தின் தர்மானகர் நகராட்சி பகுதியிலுள்ள மகேஸ்பூரில் 6 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் 24 ஆம் திகதி மாயமானார். ஓரிரு நாட்களில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 27 வயது வாலிபரும் காணாமல் போனார்.
3 நாட்கள் கழித்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் காணாமல் போன சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இவ்வழக்கை விசாரித்து வந்த பொலிஸார் சிலநாட்களில் சஞ்சய்-ஐ கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை கற்பழித்து பின்பு கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை காட்டிற்குள் வீசியதாக சஞ்சய் ஒப்புக்கொண்டார். அவர் மீதான வழக்கு திரிபுரா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
21 நபர்களின் சாட்சிகள் மற்றும் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிறுமியை சஞ்சய் கற்பழித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Average Rating