நடுவானில் குட்டி விமானத்துடன் மோதல் பிரேசில் விமானம் விழுந்து நொறுங்கியது 155 பயணிகள் பலி
நடுவானில் குட்டி விமானத்துடன் மோதிய பிரேசில் விமானம் மாயமானது. அதில் இருந்த 155 பயணிகளும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் பயணிகள் விமானம் மனாஸ் என்ற நகரில் இருந்து தலைநகர் ரியோடி ஜெனிரோவுக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 149 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.
அமேசான் வனப்பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டு இருந்த போது குட்டி விமானத்துடன் மோதியது. இதைத்தொடர்ந்து பயணிகள் விமானம் மாயமானது. அதனுடனான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் விமானத்தில் இருந்த 155 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அந்த விமானம் அமேசான் காட்டுப்பகுதியில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதைத்தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. விமானப்படை விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் விமானத்தில் இருந்த 155 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தரை இறங்கியது
இதற்கிடையே பயணிகள் விமானத்துடன் மோதிய குட்டி விமானம் பத்திரமாக தரை இறங்கி உள்ளது. விமானத்தின் இறக்கை மட்டுமே சேதம் அடைந்து இருக்கிறது. தனியாருக்கு சொந்தமான அந்த சொகுசு விமானத்தில் 18 பேர் இருந்து இருக்கிறார்கள்.