இந்­தி­யாவை சமா­ளிப்­பாரா கோத்தா? (கட்டுரை)

Read Time:20 Minute, 7 Second

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது தான்.

தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே இந்­திய ஊட­கங்கள், சீன சார்பு கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னி­லையில் இருப்­ப­தாக கருத்­துக்­க­ணிப்­புகள் தெரி­விப்­ப­தா­கவே செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

அவர், தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்­னரும், கோத்­தா­பய ராஜபக் ஷவை சீன சார்­பா­ள­ரா­கவே அந்த ஊட­கங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தின.

மஹிந்த ராஜபக் ஷவைப் பிர­த­ம­ராக நிய­மித்த போதும், சீன சார்­பா­ள­ரான தனது, அண்­ணனை பிர­த­ம­ராக நிய­மித்­தி­ருக்­கிறார் என்றே வர்­ணித்­தன.

இதன் மூலம், கொழும்பின் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் பற்றி இந்­தி­யாவில் சீன சார்பு விம்பம் ஒன்றே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது உறு­தி­யாகத் தெரி­கி­றது.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிக்க இந்­தியப் புல­னாய்வுப் பிரிவு முக்­கிய பங்­காற்­றி­யது என்ற குற்­றச்­சாட்­டு­களை ராஜபக் ஷவினர் சுமத்­திய பின்னர், அவர்­க­ளுக்கும் புது­டெல்­லிக்கும் இடையில் உற­வுகள் நல்ல நிலையில் இருக்­க­வில்லை.

எனினும், அண்­மைக்­கா­லத்தில் மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொண்டு உற­வு­களை சீர்­ப­டுத்த முயன்­றி­ருந்தார்.

ஆனாலும், ஜனா­தி­பதி .வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர், கோத்­தா­பய ராஜபக் ஷ புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்ள விரும்­பிய போதும், அதற்குச் சாத­க­மான பதில், புது­டெல்­லியில் இருந்து கிடைத்­தி­ருக்­க­வில்லை.

எனினும், இந்த ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து இந்­தியா அதிகம் கரி­சனை கொண்­டி­ருந்­தது. உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­தது, தேர்தல் தொடர்­பாக எந்தக் கருத்­தையும் தப்பித் தவ­றியும் வெளி­யி­ட­வில்லை.

நடு­நி­லையில் இருப்­பது போன்று இந்­தியா காட்டிக் கொண்­டாலும், ”கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெறு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை என்றும், அவர் வெற்றி பெற்­றதும் உள்­ளுக்குள் வருந்­தி­ய­படி தான் வாழ்த்துக் கூறி­யது” என்றும் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று எழு­தி­யி­ருந்­தது.

இந்த தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஒன்­றுக்­கான தெளி­வான வாய்ப்­பு­களை இந்­தியா கணித்­தி­ருந்­தது. எனவே, யார் வெற்றி பெற்­றாலும் அவ­ருடன் இணைந்து பய­ணிப்­ப­தற்­கான வழி­மு­றை­களைத் தேடிக் கொள்­வதில் தான் இந்­தியா கவனம் செலுத்­தி­யது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்கை விட­யத்தில் சீனாவின் அதி­க­ பட்ச தலை­யீ­டு­களை எதிர்க்­கி­றது. அதனால் இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு பாதிப்பு வந்து விடக்­கூ­டாது என்­பதில் கவலை கொள்­கி­றது.

இந்­தி­யாவின் இந்தக் கவ­லை­க­ளையும் மீறி சில சம்­ப­வங்கள் நடந்து விடு­வ­தையும் புறக்­க­ணித்து விட முடி­யாது.

இலங்­கையில் ஜனா­தி­பதித் தேர்தல் நடப்­ப­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்­ன­தாக, சீன கடற்­ப­டையின் ஆழ்­கடல் ஆய்­வுக்­கப்­ப­லான, Zhu Ke Zhen 150 கடற்­ப­டை­யி­ன­ருடன் கொழும்பு துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­தது.

கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றுக் கொண்ட பின்னர், கடந்த 19ஆம் திகதி தான் அந்தக் கப்பல் கொழும்­பி­லி­ருந்து புறப்­பட்டுச் சென்­றது.

பல மாதங்­க­ளாக சீன கடற்­படைக் கப்­பல்கள் கொழும்பு வரு­வது குறைந்து போயி­ருந்த போதும், தேர்தல் காலத்தில் சீன கடற்­படைக் கப்பல் ஒன்று கொழும்பில் தரித்து நின்­றது சாதா­ர­ண­மான விட­ய­மல்ல.

இது பார­தூ­ர­மான விட­ய­மாக எடுத்துக் கொள்­ளப்­ப­டா­வி­டினும், அலட்­சியம் செய்­யப்­படக் கூடிய ஒன்­றாக இருக்­க­வில்லை.

இதுவே, ஒரு நாச­காரிக் கப்­ப­லா­கவோ, நீர்­மூழ்கிக் கப்­ப­லா­கவோ இருந்­தி­ருந்தால், இந்­தி­யாவின் பிர­தி­ப­லிப்பு வேறு வித­மா­ன­தா­கவே இருந்­தி­ருக்கும். இது­போன்ற நிகழ்­வு­களை இந்­தியா விரும்­ப­வில்லை.

சீன கடற்­ப­டையின் கப்­பல்­க­ளுக்­காக இலங்கை தனது தளங்­களை திறந்து விடு­வ­தையோ, இலங்கை கடற்­ப­ரப்பை சீன கடற்­க­லங்கள் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தையோ இந்­தி­யா­வினால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது. ஆனால், ராஜபக் ஷவினர், சீனாவை தங்­களின் நெருங்­கிய பொரு­ளா­தாரப் பங்­கா­ளி­யாகப் பார்க்­கின்­றனர். இந்­தி­யாவின் நலன்­களைப் புறக்­க­ணிக்­கா­வி­டினும், சீனாவின் உற­வு­க­ளையும் அவர்­களால் ஒதுக்கி வைக்க முடி­யா­துள்­ளது.

கோத்­தா­ப­பய ராஜபக் ஷவுக்கு அனுப்­பிய வாழ்த்துச் செய்­தியில் “இந்த வெற்றி, இரு­த­ரப்பு உற­வு­களை புதிய யுகத்­துக்கு கொண்டு செல்ல உதவும்” என்று சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் குறிப்­பிட்­டி­ருந்தார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்க முன்னர் அவரை இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்­தித்­ததைப் போலவே, மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராகப் பத­வி­யேற்க முன்­ன­தாக, சீனத் தூதுவர் செங் ஷியுவான் அவரைச் சந்­தித்­தி­ருந்தார்.

இவ்­வா­றாக இந்­தி­யா­வுக்கு இணை­யான அர­சியல் -இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை சீனாவும் முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்ள இந்தச் சூழல் இந்­தி­யா­வுக்கு முற்­றிலும் சாத­க­மான ஒரு களம் என்று கூறி­விட முடி­யாது.

ஆனால், இந்­தியா இதனை மிகவும் கவ­ன­மா­கவும், அதே­வேளை எச்­ச­ரிக்­கை­யு­டனும் கையாள முனை­வ­தா­கவே தோன்­று­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ தமது கட­மை­களைப் பொறுப்­பேற்ற 6 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள், எந்­த­வி­த­மான பகி­ரங்க முன்­ன­றி­விப்­பு­களும் இன்றி- இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர், கொழும்பு வந்­தி­றங்­கி­யது சாதா­ர­ண­மான ஒரு விட­ய­மல்ல.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை புது­டெல்­லிக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கவே, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் கொழும்பு வந்தார் என்­பது அவ்­வ­ள­வாக நம்பக் கூடிய கதை­யாக இல்லை.

இதற்கு முன்­ன­தாக இந்­தியா இவ்­வா­றான நகர்­வு­களை முன்­னெ­டுத்­த­தில்லை.

அண்­மையில் மாலை­தீவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட போது, புதிய ஜனா­தி­ப­தி­யாக இப்­ராகிம் சோலி பத­வி­யேற்பு நிகழ்வில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பங்­கேற்­றி­ருந்தார். அது மாலை­தீவின் அழைப்பின் பேரில் இடம்­பெற்ற பயணம்.

ஆனால், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரே நேர­டி­யாக கொழும்பு வந்தார் என்­பது, சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ளக் கூடிய விட­ய­மன்று.

அவர் கொழும்பில் வந்­தி­றங்­கிய பின்னர் தான், அது­பற்­றிய தக­வல்கள் உல­கத்­துக்கே தெரி­ய­வந்­தது. அவர் கொழும்பு வந்­தி­ருப்­பது குறித்து ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு மறுநாள் மதியம் வரை – அந்தப் பயணம் குறித்து எந்த செய்­தி­யையும் வெளி­யி­ட­வில்லை.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் நேர­டி­யாகச் சென்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சந்­தித்து விட்டு, தனது டுவிட்டர் பக்­கத்தில் படங்­க­ளுடன் செய்­தியைப் பகிர்ந்­தி­ருந்தார்.

அதில், இந்­தியப் பிர­த­மரின் அழைப்பை ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜபக் ஷ ஏற்றுக் கொண்­டுள்ளார் என்றும், அவர் எதிர்­வரும் 29ஆம் திகதி புது­டெல்லி வருவார் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்தச் சந்­திப்பு நடந்து கிட்­டத்­தட்ட 18 மணித்­தி­யா­லங்கள் வரை- இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­கா­ர­பூர்­வ­மான எந்தச் செய்­தியும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

மறுநாள் நண்­பகல் 11.40 மணிக்கு பின்­னரே, கோத்­தா­பய ராஜபக் ஷவின் சமூக வலைத்­தளப் பக்­கங்­களில், படங்­க­ளுடன் இந்­திய வெளி­வி­வா­கர அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பு பற்­றிய தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

ஏன் இவ்­வ­ளவு தாமதம் என்­பது விளங்­காத புதி­ராக உள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்­றதும், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் உட­ன­டி­யா­கவே வந்து வாழ்த்தி, புது­டெல்­லிக்கு வாருங்கள் என்று விடுத்த அழைப்பு உண்­மையில் மதிப்­பு­மிக்­க­தாகப் பார்க்­கப்­பட வேண்­டிய ஒன்று.

ஆனால், ராஜபக் ஷவி­ன­ராலும், அவர்­களின் அர­சாங்­கத்­தி­னாலும் இந்த அழைப்­பையும், பய­ணத்­தையும் அவ்­வாறு பார்க்க முடி­கி­றதா என்ற கேள்வி இருக்­கி­றது.

ஏனென்றால், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பு, புது­டெல்லி பயணம் பற்­றிய செய்­தியை கோத்­தா­பய ராஜபக் ஷவோ அவ­ரது அர­சாங்­கமோ உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்­த­வில்லை. 18 மணி நேரம் கழித்தே அந்தச் செய்­தியை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­னார்கள்.

எனவே தான், இது, அழுத்­தத்தின் பேரில் – வேறு வழி­யின்றி தீர்­மா­னிக்­கப்­பட்ட, வேண்டா வெறுப்­பாக முடிவு செய்­யப்­பட்ட ஒரு பய­ணமா என்ற சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது.

ஏனென்றால், சிங்­கள பௌத்த பெரும்­பான்மை மக்­களின் பேரெ­ழுச்­சி­யுடன் பத­விக்கு வந்­துள்ள அவர்­க­ளுக்கு, இந்­தி­யாவின் தயவு இப்­போது அதிகம் தேவைப்­ப­ட­வில்லை.

அவ­ச­ரப்­பட்டு இந்­தியா தமது பக்­கத்­துக்குள் இழுக்க முயற்­சிப்­பதை அவர்­களால் அவ்­வ­ளவு ஜீர­ணித்துக் கொள்ள முடி­ய­வில்லை என்றே தெரி­கி­றது.

ஆனாலும், அதனை வெளிக்­காட்டிக் கொள்­ளவும் முடி­யாமல், ஏற்றுக் கொள்­ளவும் முடி­யாமல், திண­று­கின்ற ஒரு நிலை தென்­ப­டு­கி­றது.

இந்­தியா தனது வெளி­வி­வ­கார அமைச்­சரை உட­ன­டி­யாக கொழும்­புக்கு அனுப்­பி­ய­தற்குக் காரணம், சீனாவோ, அல்­லது, தனக்கு எதி­ரான வேறு சக்­தி­களோ, முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் பேச்­சுக்­களை நடத்தி, தமது பக்கம் இழுத்துக் கொள்­வதை தடுப்­ப­தற்­காக மாத்­திரம் அல்ல.

புது­டெல்­லிக்­கான பய­ணத்தை மிக­வி­ரை­வாக அவர் மேற்­கொள்­வ­தற்கு வழி­ய­மைப்­பது தான்.

வெளி­வி­வ­கார செய­லரை அனுப்­பி­யி­ருக்­கலாம் அல்­லது தூதுவர் மூலம் அழைத்­தி­ருக்­கலாம். அவ்­வாறு செய்­யாமல் இந்­தியா வெளி­வி­வ­கார அமைச்­சரை அனுப்­பி­யதில் இருந்தே, இந்த விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் ஈடு­பாடு அதி­க­மாக இருப்­பதை உணர முடி­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­ன­தல்ல என்றே இந்­திய ஊட­கங்கள் எழுதி வரு­கின்­றன. அவ­ரது சீன, பாகிஸ்தான் சார்பு நிலை­களை அந்த ஊட­கங்கள் திரும்பத் திரும்ப சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

சீனாவின் நெருக்­க­மான அர­வ­ணைப்­புக்குள் ராஜபக் ஷவினர் மீண்டும் செல்­வதை அனு­ம­தித்து, இந்­தியா மீண்டும் தவ­றி­ழைக்கக் கூடாது என்று அவை திரும்பத் திரும்ப வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்த நிலையில், அதற்­கான உறு­திப்­பாட்டை கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் இருந்து பெற்றுக் கொள்­வ­தற்கு இந்­தியா முனை­கி­றது போலவே தெரி­கி­றது.

ஹிந்­துஸ்தான் ரைம்ஸ் தனது ஆசி­ரியர் தலை­யங்­கத்தில், இரண்டு விவ­கா­ரங்­களில் இந்­தியா தனது தெளி­வான எல்லைக் கோட்டை கீறி விட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது,

சீனா­வு­ட­னான இலங்­கையின் உற­வுகள் இந்­தி­யாவின் பாது­காப்பு நலன்­களைப் பாதிக்­கு­மாக இருந்தால், தனது செல்­வாக்கைப் பிர­யோ­கிக்க வேண்­டி­வரும் என்­பதை இலங்­கைக்கு புது­டெல்லி தெளி­வு­ப­டுத்தி விட வேண்டும்.- இது முத­லா­வது விடயம்.

தமி­ழர்­களின் கிளர்ச்சி மீண்டும் மூளக் கூடி­ய­தாக இலங்­கையை ஒரு தனித்­து­வ­மான இனத்­துவ அர­சாக மாற்றி விடக்­கூ­டாது என்று ராஜபக் ஷவி­ன­ருக்கு சொல்­லப்­பட வேண்டும். அவ்­வா­றான நிலைமை தோன்­றினால், அது இரு நாடு­க­ளுக்­குமே பாத­க­மாக அமையும் என்றும் கூறி­யி­ருக்­கி­றது ஹிந்­துஸ்தான் ரைம்ஸ் – இது இரண்­டா­வது விடயம்.

பிராந்­திய அர­சி­யலில் மாலை­தீவில் சீனாவின் ஆதிக்­கத்தை அண்­மையில் உடைத்த இந்­தியா, நேபா­ளத்தில், கிட்­டத்­தட்ட தோல்வி கண்­டி­ருக்­கி­றது, அங்கு சீனாவின் செல்­வாக்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

அடுத்து மியான்­ம­ரிலும் தேர்தல் நடக்கப் போகி­றது. நேபா­ளத்தைப் போல மியான்­ம­ரிலும் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது.

இந்­தியா தன்னைச் சுற்றி சீன ஆதிக்கம் வலுப்­பெற்று வரும் ஒரு சூழலில், இலங்­கை­யையும் சீனா­விடம் இழந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக அதி­க­பட்ச முயற்­சி­களை முன்­னெ­டுக்கும் என்றே தெரி­கி­றது.

இந்த நிலையில், சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யின மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ராக இருந்தாலும், இலங்கையை பெரும்பான்மையினருக்கான ஒரு அரசாங்கமாக மாற்றிக் கொள்வதற்கு கோத்தாபய ராஜபக் ஷவுக்கு இந்தியா இடமளிக்காது என்றே தெரிகிறது,

ஏனென்றால், அது இலங்கையிலும், பிராந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, பூகோள அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று இந்தியா கருதுகிறது.

அதனால் தான், கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கோத்தாபய ராஜபக் ஷவிடம், தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, கண்ணியமான முறையில் அமைதியாக வாழக் கூடியதாக, அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயல்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அது மாத்திரமன்றி, இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்ற உறுதிமொழியையும் அவர் கொடுத்திருக்கிறார்.

இவை, இலங்கை விவகாரத்தில் இந்தியா புதியதொரு வழிமுறையைக் கையாளுவதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது.

எனவே, விரும்பியோ விரும்பாமலோ கோத்தாபய ராஜபக் ஷவும், இந்தியாவும், எதிர்காலத்தில் தமக்கிடையில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!! (அவ்வப்போது கிளாமர்)
Next post 900 வயதுடைய மனிதர் வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ)