ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 46 Second

* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

* பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

* குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

* கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் சுண்ணாம்பு விட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன.

* கருப்பட்டி இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். வெள்ளைக் சர்க்கரைக்கு பதில் இதனை பயன்படுத்துவதால் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது.

* சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்துடன் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

* உணவில் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், நரம்புகளும் உறுதியாகும்.

* நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

* கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும், குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

தொகுப்பு: லதா சம்பத்குமார், குடியாத்தம்.

சாம்பார்: தென்னிந்தியாவின் அடையாளம்

* பாரம்பரிய பெருமை, சுண்டியிழுக்கும் ருசி, அனைத்தையும் தாண்டி, இதன் மருத்துவக்குணம், இன்றைக்கு பல நாட்டு உணவியலாளர்களையும், மருத்துவர்களையும் சாம்பாரை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

* குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு.

* புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் (Carcinogen) என்கிற மூலப் பொருளைத் தடுக்கும் ஆற்றலும் சாம்பாருக்கு உண்டு.

* இந்த ஆற்றலைத் தருவது சாம்பார் பொடியில் சேர்க்கப்படும் மூலப் பொருள்கள்தான் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

* சாம்பாரில் மஞ்சள் இருப்பதால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயை வராமல் பாதுகாக்கும்.

* சாம்பார் பெரும்பாலும் துவரம் பருப்பில் தான் செய்வார்கள். இது புரதச்சத்து நிறைந்தது.

* மிளகு, மல்லி போன்றவை சாம்பாருக்கு அரைக்கும் பொடியில் சேர்க்கப்படுதால், சளி, இருமலைச் சீர் செய்யும் திறன் இதற்குண்டு.

* பெருங்காயம் சேர்க்காமல் சாம்பார் மனக்காது, பெருங்காயம் செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது.

* கடைசியாக சாம்பாரை கறிவேப்பிலை கொண்டு தாளிப்பது வழக்கம். இது இரும்புச்சத்து மிகுந்தது.

*இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதால் குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற உணவு. ‘சாம்பர் உணவல்ல மருந்து.’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சர்க்கரைக்கு சரியான மாற்று?! (மருத்துவம்)