அவசர நடவடிக்கை தேவை !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 1 Second

இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

உடனடியாக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் எடுத்து செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சமீப காலம் வரை இந்தியாவும் ஒன்றாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். எனினும், தற்போது இந்தியா குறிப்பிடத்தக்க பொருளதார மந்தநிலையை சந்தித்து வருகிறது,” என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்திய உதவி இயக்குநர் ரணில் சல்கடொ தெரிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட கடன் விரிவாக்கம், வலுவிழந்த ஊதிய வளர்ச்சி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என்கிறார் அவர். நிதித்துறை சந்தித்த சில சவால்களால், தனியார் துறையின் முதலீடுகளும் பாதிக்கப்பட்டதாக ரணில் கூறுகிறார்.

தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்குவது மிக முக்கியமான தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாணயக் கயிற்றின் தேவை !! (கட்டுரை)
Next post இணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் அரசு!! (உலக செய்தி)