குடிபோதையில் பட அதிபரை தாக்கிய நடிகை !! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 3 Second

தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா கல்ராணி. தற்போது மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

சஞ்சனா கல்ராணி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்து இருந்தார். நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சஞ்சனாவுக்கும் தயாரிப்பாளர் வந்தனா ஜெயினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மோதல் தீவிரமாகி சஞ்சனா கல்ராணி கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்தார். சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சஞ்சனா கல்ராணி தரப்பில் கூறும்போது, தயாரிப்பாளருடன் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர்கள் அடித்துக் கொள்ளவில்லை என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ATM கார்டு நம்பர் கேட்டவன் பட்ட பாடு!! (வீடியோ)
Next post 65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்!! (உலக செய்தி)