மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)

Read Time:2 Minute, 12 Second

சேலத்தில் ஈ.வெ.ராமசாமி நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி உரையாற்றி இருந்தார்.

இப்படி உரையாற்றி மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த, ´துக்ளக்´ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ´முரசொலி´ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ராமசாமி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971 இல் சேலத்தில் ஈ.வெ. ராமசாமி நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி உரையாற்றினார்.

இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட, பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ´சேலம் ஊர்வலத்தில் கடவுள்களின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்படவில்லை. தன் பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் மறுத்தால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள, தர்பார் படத்தை ஓட விட மாட்டோம். அந்த படம் ஓடும் தியேட்டர்கள் முன், போராட்டம் நடத்துவோம்´ என, அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ரஜினி வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் !! (உலக செய்தி)
Next post மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!! (அவ்வப்போது கிளாமர்)