தும்மலை போக்கும் கற்பூரவல்லி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 43 Second

நமக்கு அருகில் எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வில்வம், தும்பை பூ, கற்பூரவல்லி ஆகியவற்றை கொண்டு தும்மல், தலைநீரேற்றத்தை போக்குவது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.தலைநீரேற்றத்தால் மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, அடுக்கடுக்கான தும்மல், தலைவலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது.

கற்பூரவல்லி தண்டுகளை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதனுடன், கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் எடுத்து சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். இந்த தேனீரை தினமும் உணவுக்கு முன்பு எடுத்துவர தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலைநீரேற்றம் இருக்கும்போது கடுமையான வலி, அடிக்கடி தும்மல் இருக்கும். மூக்கில் அரிப்பு ஏற்படும். இப்பிரசனைகளுக்கு கற்பூரவல்லி தேனீர் அற்புதமான பலனை தருகிறது.

வில்வ இலையை பயன்படுத்தி தலைநீரேற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வில்வ இலை, சீரகம், தேன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதனுடன் சீரகம், நீர் விடாமல் அரைத்த வில்வ இலைகள் அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர தலைநீரேற்றம் சரியாகும். இந்த தேனீர் தலைபாரத்தை குறைக் கிறது. மூக்கில் சளி ஒழுகுதலை நிறுத்துகிறது. நெஞ்சக சளியை வெளித்தள்ளுகிறது. ஒவ்வாமையை போக்கும் அற்புதமான மருந்தாக வில்வம் விளங்குகிறது. இது, சர்க்கரை நோய், தோல் நோய்க்கு மருந்தாகிறது.

தும்பை பூவை கொண்டு தலைநீரேற்றத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தும்பை பூ, நல்லெண்ணெய், சாம்பிராணி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் 2 சிட்டிகை சாம்பிராணி, தும்பை பூ சேர்த்து பொறிக்கவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தலைநீரேற்றம் சரியாகும். அடிக்கடி குளிர் பானங்கள் குடிப்பது, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது போன்றவற்றால் நீரேற்றம் ஏற்படும். இப்பிரச்னைக்கும் தும்பை பூ தைலம் அற்புதமான மருந்தாகிறது.

இது, உடலுக்கு உஷ்ணத்தை தருகிறது. தலையில் உள்ள பொடுகை போக்குகிறது.எளிதில் கிடைக்க கூடிய கற்பூரவல்லி, தும்பை பூ, வில்வம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் தலைநீரேற்ற பிரச்னை எளிதில் சரியாகும். குமட்டல், வாந்தியை நிறுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை வெங்காயம், இஞ்சி, தேன். செய்முறை: வெள்ளை வெங்காயம் சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இஞ்சி சாறு, தேன் சேர்த்து குடித்துவர குமட்டல், வாந்தி பிரச்னை சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுக்கு அழகு சேர்க்க !! (மகளிர் பக்கம்)
Next post கற்றாழை!! (மருத்துவம்)