ஊரடங்கை மீறிய வாலிபருக்கு நூதன தண்டனை !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 3 Second

கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், கடந்த 11 ஆம் திகதி தனது இருசக்கர வாகனத்தில் கொல்கத்தாவை வலம் வந்தார். சாரு மார்க்கெட் பகுதியில், அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, வீட்டில் இருந்து 7 கி.மீ. தூரம் வெளியே வந்ததற்கு அவரால் திருப்திகரமான விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரிடம் வாகனத்துக்கான ஆவணங்களும் இல்லை. அத்துடன், தடுத்து நிறுத்திய பொலிரை சரமாரியாக திட்டினார். தப்பி ஓட முயன்றார்.அதனால், அரசு உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, பொது ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அலிப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, கொரோனாவுக்கு எதிராக தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யுமாறு நூதன தண்டனை விதித்தார்.

அதன்படி, கொல்கத்தாவில், பொலிஸார் குறிப்பிடும் பகுதியில், அந்த வாலிபர் தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை பிரசாரம் செய்கிறார் அதாவது, கோர்ட்டு நிர்ணயித்த நேரத்துக்கு மேல் அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனா பரிதாபம் – முதியோர் இல்லங்களில் 1,400 பேர் பலி!! (உலக செய்தி)
Next post கறிவேப்பிலை!! (மருத்துவம்)