96 பொலிஸாருக்கு கொரோனா !! (உலக செய்தி)
Read Time:1 Minute, 3 Second
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 96 பொலிஸார் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் 7 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating