காவல்துறை உத்தியோகத்தர் கிரேனேட்டுடன் கைது
மதுபோதையில் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதுடன் கிரேனேட்டை வீசிக்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மாத்தளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தெனியாய பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வரும் இவர் மாத்தறையில் உள்ள இவரது வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால். மனைவி உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று விட்டார். அதனால் மரண வீட்டுக்குச் சென்ற அவர் மனைவியை வீட்டுக்கு வருமாறு கேட்டுள்ளார்.
உறவினர் வீட்டு மரணம் என்பதால் தன்னால் உடனே வரமுடியாது என்றும் காலையில் வருவதமாகவும் மனைவி கூறினார். இதனையடுத்து அங்கிருந்து சென்ற அவர் மதுபானம் அருந்திவிட்டு மீண்டும் மரண வீடடுக்கு வந்து மனைவியை வீட்டுக்கு வருமாறு கேடடுள்ளார். அப்போதும் மனைவி வரமுடியாது என்று கூறவே அவர் மனைவியை மரண வீடு என்றும் பாராமல் பலர் முன்னிலையில் அடித்து துன்பறுத்தியுள்ளார். அத்துடன், தனது காற்சட்டைப் பையில் இருந்து கிரேனேட்டை எடுத்து எறியப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மாத்தறை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!