இங்கிலாந்தில் சர்ச்சையை கிளப்பிய பர்தா
Read Time:1 Minute, 10 Second
இங்கிலாந்தில் முன்னாள் வெளிநாட்டு மந்திரி ஜாக் ஸ்ட்ரா முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. முஸ்லிம் பெண்கள் முகத்திரையுடன் கூடிய பர்தா அணிந்து கொண்டு இருப்பதால் சமுதாயஉறவு பாதிப்படைகிறது.அது மக்களை பிரிக்கிறது .மற்றவர்களுடன் பேசும்போது முகம் காட்டி பேசவேண்டும் என்று கூறிஇருந்தார் முஸ்லிம் பெண்கள் என்னை பார்க்க வந்தபோது முகத்திரையை எடுத்து விட்டுப்பேசும்படி கூறினேன். அவர்களும் அதன்படியே செய்தனர் என்றும் கூறிஇருந்தார்.
அவரது இந்தக்கருத்து இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.அந்த நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.