ஃப்ளவர்லயும் செய்யலாம் சாலட்!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 48 Second

சர்ப்ரைஸ்

ஃப்ரூட் சாலட் தெரியும்… வெஜிடபிள் சாலட் தெரியும்… ஃப்ளவர் சாலட் தெரியுமா?!
‘ஃப்ளவர்ல சாலட்டா… என்ன விளையாடறீங்களா?’ என்று மைண்ட் வாய்ஸுக்குள் யாரோ சொல்கிறார்களா… டென்ஷனாகாதீர்கள். கூல்… நிஜமாகவே பூக்களிலேயே செய்யப்படுகிற சாலட்தான் ஃப்ளவர் சாலட். பலருக்கும் தெரியாத… ஆனால் தெரிந்துகொண்டு சுவைக்க வேண்டிய ஒரு ஹெல்த்தியான சாலட்தான் ஃப்ளவர் சாலட்.ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம். வாருங்கள்…

* செம்பருத்திப்பூ

செம்பருத்தியில் அடுக்கு செம்பருத்தி, ஒற்றை செம்பருத்தி என பல வகைகள் இருக்கின்றன. இதில் 5 இதழ்களுடன் சிவப்பு நிறம் கொண்ட செம்பருத்தி பூவில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. உணவில் செம்பருத்தியை சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் சீராகும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தி–்ல் கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெண்களின் கருப்பை நோய் அனைத்தும் குணமாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். மாதவிடாய் சுழற்சி சீராகும். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இதயம் பலம் பெறும்.

* பன்னீர் ரோஜா

ரோஜாவில் வெளிர் ரோஸ் நிறத்தில் இருக்கும் பன்னீர் ரோஜா மட்டும்தான் உண்ணக்கூடியது. இதிலிருந்துதான் பன்னீா், குல்கந்து தயாரிக்கிறார்கள். Tannin, Cyanine, Carotene மற்றும் Chlorogenic போன்ற செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் பன்னீர் ரோஜாவில் இருப்பதால் சருமத்தில் வனப்பை ஏற்படுத்தும். ரத்தவிருத்திக்கு உகந்தது. உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உடலில் பித்தத்தை குறைக்கும். ரத்தத்தட்டுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

* துத்திப்பூ

சாலையோரங்களில் கண்ணுக்கு இதமாய் காட்சிதரும் துத்திப்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. ரத்த வாந்தி, ரத்தபேதி, சிறுநீரில் ரத்தம், சளியில் ரத்தம் என ரத்தம் சம்பந்தமான நோய்கள் எல்லாவற்றுக்கும் துத்திப்பூ நல்லது. ஆண்
களின் விந்தணுக்களை பெருக்கக்கூடியது. ஆஸ்துமா, இரைப்பு நோய் மற்றும் காச நோய் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும். மூலநோய்க்கு இது சிறந்த மருந்து.

* ஆடாதோடை மலர்

பெரியதாகவும் வெண்மையாகவும் இருக்கும் இந்தப் பூக்கள் நுனியில் ஊதா நிறத்தில் அடர்த்தியாக ஒரே தண்டில் கொத்துக் கொத்தாக பூத்திருக்கும். இவற்றில் காணப்படும் Vasicine என்னும் வேதிப்பொருள் இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. தொண்டை கமரல் மற்றும் கபத்தை கட்டுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலைக்கும், பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ஆடாதோடை பூக்கள் மருந்தாகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் காணப்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

* கரிசலாங்கண்ணிப்பூ

மஞ்சள், வெள்ளை நிறங்களில் கரிசலாங்கண்ணிப் பூக்கள் இருக்கின்றன. இவற்றில் இரும்புச்சத்து, தங்கச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கல்லீரல்,
மண்ணீரல்களுக்குப் பாதுகாப்பாகும் மருந்தாகிறது. தலைமுடி அடர்த்தியாகவும், இளநரை நீங்கி கருமையாகவும் வளரும். ஞாபக சக்திக்கும் சிறந்த மருந்து. தங்கச்சத்து இருப்பதால் மேனி பொன்போன்று மிளிரும்.

* மகிழம்பூ

வாடிப்போன பின்னும் வாசனை தருவது மகிழம்பூ. உறுதியான பல்லுக்கு மிகவும் நல்லது மகிழம்பூ. இதயக்கோளாறு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல், பல்வலி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகிய உபாதைகளுக்கு மகிழம்பூ சிறந்த மருந்தாகும். சீதபேதி, கர்ப்பப்பை கோளாறுகளுக்கும், கருமுட்டை உற்பத்திற்கும் மருந்தாகிறது. மகிழம்பூவை முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.

* கல்யாண முருங்கை

கல்யாண முருங்கைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று இருக்கும். பொதுவாகவே முருங்கைப்பூக்கள் ஆண்மையைப் பெருக்கும் தன்மையுடையன. வயிற்றுப் புழுக்களைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; தாய்ப்பால் பெருக்கும். நீண்ட நாட்கள் மாதவிலக்கு ஏற்படாதவர்களுக்கும் மாதவிலக்கைத் தூண்டும். கருப்பையை சுத்தமாக்கி உடல்பலத்தை அதிகரிக்கும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாக கல்யாண முருங்கை நல்ல பலனளிக்கக்கூடியது.

* பவளமல்லிப்பூ

வெள்ளை நிற இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனை உடைய பூ பவளமல்லிப்பூ. இதை பாரிஜாதம் என்றும் சொல்வார்கள். இரவில் பூக்கும் இந்த மலர்கள் காலையில் மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. மூலநோய், வயிற்றுக் கோளாறுகள், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகிறது. மூட்டுவலி, கல்லீரல் நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது.

* ஆவாரம்பூ

மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும் ஆவாரம்பூ சர்க்கரை நோய்க்கும், தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து. உடல்சூடு, நீர்க்கடுப்பை பொக்கும் போகும்.

* மல்லிகைப்பூ

கண்பார்வையை கூர்மையாக்கும் சக்தி மல்லிகைக்கு உண்டு. ஆண்மையைப் பெருக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)
Next post மூன்றாம் உலகப்போருக்கான 3 அறிகுறிகள்!! (வீடியோ)