லட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 35 Second

இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட கடந்த ஜனவரி 26ம் தேதி, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 34 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். சிறந்த இசைக்கலைஞர், கல்வியாளர், விஞ்ஞானிகள் என பலதுறை சார்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் சில சாமானியர்களும் இடம்பெற்றிருந்தனர். அதிலும் 72 வயதான பழங்குடியின பெண் ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையில் அந்த பெண்ணுக்கு கிடைத்த கவுரவம் என்பதை விட விருதுக்கு கிடைத்த கவுரவம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

கர்நாடக மாநிலம் Honalli கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் துளசி கவுடா என்ற மூதாட்டிதான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். வீடுகள் கட்டுவதற்காக பல்வேறு மரங்களை அழித்துவரும் நபர்கள் வாழும் இந்த நாட்டில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை நிரந்தர தொழிலாக செய்து வருகிறார் துளசி. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், இதுவரை அவர் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரங்களாகவும் வளர்த்து சாதனை படைத்துள்ளார். அவர் பழங்குடியின பெண் என்பதால் மரங்கள், விதைகள், அவற்றின் தன்மை எல்லாம் அத்துபடி. இதனால் அவரை பொதுமக்கள் வனங்களின் கலைக்களஞ்சியம் என்றே அழைக்கிறார்கள். இதை விட சிறப்பு அம்சமாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கடந்த ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில் ஸ்ரீ புகழப்படாத கதாநாயகி’ என்று அடைமொழியிட்டு துளசி பாட்டியின் சேவையை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னலமற்ற சேவையால் நாட்டையே பசுமையாக மாற்றி வரும் அந்த பாட்டியின் பங்களிப்பு மகத்தானது என்றும் அவரது வாழ்க்கை இளந்தலை முறையினருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் அமைச்சர் பாராட்டியுள்ளார். துளசி பாட்டி அடிப்படை கல்வி கூட கற்கவில்லை. ஆனால் அவருக்கு செடிகளை பற்றியும், மூலிகை செடிகளை பராமரிப்பது பற்றிய பரந்த அறிவும் உள்ளது. மரங்களை வளர்ப்பது மட்டுமின்றி வளர்ந்து விட்ட மரங்களை காட்டுத்தீயில் இருந்து எப்படி காப்பது என்ற தொழில்நுட்பமும் அறிந்தவர். அதனால் தான் சிக்கலான காட்டுத்தீயை அணைக்க தவிக்கும் போதெல்லாம் வனத்துறையினர் துளசியின் உதவியை நாடுகின்றனர். இவரது சேவையை பாராட்டிதான் இந்த விருதுக்கு துளசியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாரையும் நம்பி நான் இல்லை!! (மகளிர் பக்கம்)
Next post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)