சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இசை கேளுங்கள்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 31 Second

இசை மகிழ்ச்சி தருவது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இசை இப்போது மருத்துவமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மியூசிக் தெரபி என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது.

மியூசிக் தெரபி என்பது என்ன?

இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் பல இசை கலைஞர்களை மருத்துவமனைக்கு வரவழைத்து இசைக்கருவிகளை வாசித்தும், பாடல் பாடியும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார்கள். அதன் பிறகு, சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதை கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள். அறிவியல் ரீதியாகவும் இசை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பது தெரிந்த பிறகே, மியூசிக் தெரபி என்ற சிகிச்சை முறையை உருவாக்கினார்கள்.

யார் யாருக்கு இந்த சிகிச்சை முறைகள் பயன்படும்?

நோய்க்கு நேரடி மருந்தாக இது இருக்காது. ஆனால் நோயை குணப்படுத்த பக்கபலமாக இருக்கும். அதனால், இதை காம்ப்ளிமென்ட்ரி தெரபி என்றும் சொல்வார்கள். மன அழுத்தமும் பதற்றமும் அதிகமாகி விட்ட இன்றைய வாழ்வில் உடலால் வரும் நோய்களைவிட மனதால் வரும் நோய்கள் அதிகமாகிவிட்டன. ரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்களுக்கு கூட மனமே காரணமாக இருக்கிறது. கோபம், பொறாமை அதிகமாகி வருகிறது.

இந்த எதிர்மறை விஷயங்களையெல்லாம் தவிர்த்து அமைதியான முறையில், வெற்றிகரமாக ஒருவர் வாழ்வதற்கு மியூசிக் தெரபி பெரிதும் உதவி செய்கிறது. முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூட மியூசிக் தெரபி நல்ல பலனை கொடுத்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மியூசிக் தெரபி பெரிய உதவியாக இருப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும். அதனால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மியூசிக் தெரபி தேவை.

இந்த சிகிச்சையை எப்படி அளிப்பார்கள்?

“ இசையை கேட்க வைப்பது, இசைக் கருவிகளை வாசிக்க வைப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து பாடுவது, மற்றவர்கள் பாடுவதை கேட்பது என்று இதில் பல வகைகள் இருக்கின்றன. நோயாளிக்குத் தகுந்தாற்போல் இந்த சிகிச்சை முறைகள் மாறுபடும்.”

கர்ப்பிணிகளுக்கு மியூசிக் தெரபி அளிப்பது நல்லதாமே?

“ கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு கதை கேட்டதாக புராணக் கதை உண்டு. கருவைச் சுற்றியிருக்கும் அம்னியாட்டிக் திரவம் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையால் நாம் பேசுவைதை கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மியூசிக் தெரபியை தாய்க்கு அளிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் சுகப்பிரசவமாவதற்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும் மியூசிக் தெரபி உதவுகிறது.

எப்படி சிகிச்சை பெறுவது?

“ மியூசிக் தெரபிஸ்டின் ஆலோசனை கட்டாயம் இல்லை. எந்த மாதிரியான இசை நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அது சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி.. அது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியம் என்பதுதான் இதில் முக்கியம். இந்த பரபரப்பான வாழ்க்கையில் தினமும் அரை மணிநேரம் தியானம் போல இசையை அனுபவித்து செய்தால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். பாடல்கள் கேட்பதை போல நமக்கு பிடித்த இசைக் கருவிகளை வாசிக்கலாம், பாடல்களை பாடலாம்.

இதை பற்றி பிரத்யேகமாகக் கற்றுக்கொண்ட தெரபிஸ்ட்டுகளுக்கு நமக்கு தெரியாத பல நுட்பங்களும் வழிமுறைகளும் தெரியும். சுறுசுறுப்பு குறைவாக இருப்பவரை வேகமான பாடல்களை கேட்க வைத்தால் உற்சாகமாகிவிடுவார். பதற்றமாக இருப்பவரை கொஞ்சம் நிதானப்படுத்த அதற்கு தகுந்த மாதிரி இசையை கையாண்டால் கூடுதல் பலன் கிடைக்கும், இரவு நேரத்தில் உற்சாகமான பாடல்களை கேட்டால் தூக்கம் வாரது. அதனால் தெரபிஸ்ட்டுகளிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நாம் எதிர்ப்பார்க்கும் பலனை முழுமையாக கொடுக்கும்.

மாத்திரைகள் உதவாத போது?

ஆரம்ப நிலை நீரிழிவை உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகளின் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். இன்சுலின் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது தொடர் கதையாகி விடும் என பரவலான நம்பிக்கை ஒன்று உண்டு. இது தவறு. சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறும் போது சிலருக்கு சில வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு, கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, பிறகு மருத்துவர் ஆலோசனை பெற்று, மறுபடி மாத்திரைகளை தொடரலாம். இன்சுலின் பல வகைகள் உள்ளன. ஷார்ட் ஆக்டிங் இன்சுலின் என்பது 4 முதல் 6 மணி நேரம் வரை பலனளிக்கும்.

இதை உணவுக்கு முன் போட்டுக்கொள்ள வேண்டும். லாங் ஆக்டிங் இன்சுலின் என்பது 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குப் பலனளிக்கும். நோயாளிகளின் உடல்நிலை மற்றும் பாதிப்பின் அளவை பொறுத்து நாளொன்றுக்கு 1 முதல் 4 இன்சுலின் ஊசிகள் வரை தேவைப்படலாம். மாத்திரைகளை ஆரம்பித்த பிறகு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு தடவை, முறையான மருத்துவ பரிசோதனை முக்கியம். ரத்த சர்க்கரை அளவுக்கான சோதனையும், ரத்த அழுத்தத்துக்கான சோதனையும் செய்து பார்க்க வேண்டும். ரத்த சர்க்கரைக்கான சோதனையை எப்போதும் மாத்திரையை சாப்பிட்ட பிறகே எடுக்க வேண்டும். இவை தவிர, பி.பி மற்றும் கொலஸ்ட்ராலுக்கான சோதனைகளும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டப்பா UAE சாணக்கிய Mossad!! (வீடியோ)
Next post ‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு !! (கட்டுரை)