புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தால் பதில் நடவடிக்கை- ஜனாதிபதி எச்சரிக்கை
Read Time:1 Minute, 21 Second
சுவிற்சாலாந்தில் இம்மாத இறுதியில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அறிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதேசமயம், புலிகள் தாக்குதல்களைத் தொடர்ந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கு பொருத்தமான பதில் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் து}துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே புலிகள் வன்முறைகள் முற்றும் ஆத்திரத்தை து}ண்டும் செயற்பாடுகளைத் தொடர்ந்தால் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொருத்தமான பதில் நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.