மூலநோயை குணப்படுத்தும் கருணை கிழங்கு!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 9 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை கிழங்கு, மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

கருணை கிழங்கை கொண்டு உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருணை கிழங்கு, சோம்பு, தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு ஒரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலக்கவும். இதனுடன் சோம்பு மற்றும் தனியா சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்துவர கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும். கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் நல்மருந்தாக விளங்குகிறது. கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேகவைத்த கருணை கிழங்கை மசித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். குடல் புண், வயிற்று புண்களை ஆற்றும். நோய்நீக்கியாக விளங்குகிறது. கருணை கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் எரிச்சலை போக்குவதற்கு புளி அல்லது மோர் சேர்த்து வேகவைத்தால் எரிச்சல் இருக்காது.

மூலநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விடவும். இதனுடன், வேகவைத்த கருணை கிழங்கு பசை, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர ரத்த, வெளி, உள் என அனைத்து வகையான மூலம் குணமாகும். கருணை கிழங்கு நார்ச்சத்து உடையது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருணை கிழங்கு லேகியம் மூலநோய்க்கு மருந்தாகிறது.

கருணை கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தாயாரிக்கலாம். வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்கும்.கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை போக்கும். வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலம் கொடுக்கும்.குறட்டையை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தும்பை இலை ஒருபிடி எடுத்து அரை ஸ்பூன் கருஞ்சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தேனீராக்கி குடித்து வர குறட்டை பிரச்னை குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகுக் குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)
Next post பாதவெடிப்பை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)