ஆஸ்துமா பிரச்சனையா? இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 6 Second

மழைக்காலம் துவங்கிவிட்டது… பலருக்கும் இப்போது பெரும் பிரச்சனையாக இருப்பது சளி, தும்மல், இருமல், காய்ச்சல் என்பதுதான். நுரையீரல் மண்டல நோய்கள் என்பது சாதாரண தும்மல், அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிகின்ற ஒவ்வாமை, இருமல், சளி, வறட்டு இருமல் என்பதில் துவங்கி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி நோய் வரை குறிப்பிடலாம். என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இந்த பிரச்னைக்கு மருந்துகளின் தேவை அதிகரித்துக்கொண்டேதான் இருக்குமே தவிர குறையாது. மருந்தற்ற ஒரு வாழ்க்கை வாழ எல்லாருக்கும் விருப்பம் தான்.

ஆனால் சாத்தியமா என்றால்… ஆயுர்வேத மருத்துவத்தின் தத்துவம் உணவே மருந்து என்பதுதான். நுரையீரல் பிரச்னைக்கு ஒரு தேநீர் குடித்தால் போதும் என்கிறார்  வர்மா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.

நுரையீரல் தேநீர் செய்யத் தேவையான பொருட்கள்

சுத்தி செய்த காஞ்சோறி சூரணம் 3 கிராம், மாவிலிங்க மரப்பட்டை சூரணம் 3 கிராம், தேவதாரு சூரபானம் 3 கிராம்.

செய்முறை

மேற்கண்ட பொருட்களை 300 மில்லி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றியவுடன் இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

மருத்துவ குணங்கள்

நுரையீரல் தேநீர் நுரையீரல் மண்டல நோய்களை நீக்கும். அடுக்குத் தும்மல், குழாயைத் திறந்து விட்டால் கொட்டும் தண்ணீர் போல் மூக்கில் தண்ணீர் கொட்டுவது, மூக்கடைப்பு, மூக்கில் தசை வளர்ச்சி, தலைவலி, தொண்டைக் கட்டல், இருமல், வறட்டு இருமல், ஆஸ்துமா நோய் வரை எல்லாவிதமான நுரையீரல் நோய்களையும் நுரையீரல் தேநீர் மாற்றத்தை உண்டு செய்து மருந்துகளின் தேவையையும் குறைக்கும்.

மருந்துகளை நாடி செல்வதை காட்டிலும் மூச்சுப் பயிற்சியோடு இந்த கஷாயத்தையும் எடுத்துக்கொண்டால் நுரையீரல் பிரச்சனைகள் முற்றிலுமாகக் குணமாகும். 18 வயது பெண் குழந்தை, பிறந்ததில் இருந்து ஆஸ்துமாவினால் மாதத்துக்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் அட்மிட் செய்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் வளர்ந்த பெண். அவருக்கு மருத்துவர்கள் எல்லாவித மருந்துகளையும் கொடுத்துப் பார்த்துவிட்டு, இனி உங்களுக்கு ஆங்கில மருந்துகள் இல்லை. ஏதாவது இயற்கை மருத்துவரை பாருங்கள் என்ற போதுதான் அவர்கள் என்னிடம் வந்தார்கள்.

அந்த பெண்ணுக்கு முறையான மூச்சு பயிற்சி, உடற் பயிற்சி எல்லாம் சொல்லிக்கொடுத்து உணவு முறைகள் பற்றியும் சொல்லிக்கொடுத்து இந்த கஷாயத்தைத்தான் வைத்து பருகி வர சொன்னேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல்தான் சென்றார்கள். ஆனால் ஒரு மாதத்தில் அந்த சளி, இருமல் குறைந்து போய் பெண்ணுக்கு நுரையீரல் மண்டலத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

100 நாட்களில் சிரமங்கள் குறைந்தது. ஒரு வருடத்தில் ஆஸ்துமாவில் இருந்து பூரண குணமடைந்து இருக்கிறார். 39 கிலோ எடை மட்டுமே இருந்த அந்த பெண் இப்போது 45 கிலோவில் இருக்கிறார். இன்னமும் அந்த பெண்ணுக்கு காபி டீக்கு பதிலாக நுரையீரல் தேநீர் அருந்தும் வழக்கம் இருக்கிறது. அவர்களது நுரையீரல் சிறப்பு மருத்துவரே நுரையீரல் நன்றாக வேலை செய்யும் திறன் அதிகரித்து இருக்கிறது. இப்போது என்ன செய்து வருகிறீர்களோ அதையே தொடருங்கள் என்று சொல்லியதாக சொன்னார்கள்.

நுரையீரல் கஷாயம் உறுப்புக்களின் செயல்பாடுகளை சீராக்க வல்லது. ஒவ்வாமை யை ஏற்படுத்தும் நுரையீரல் செயல் இழந்து போகக் கூடிய நிலையில் இருந்தாலும் கஷாயத்தை பருகி வரும்போது ஆரோக்கியம் அடைவதை காண முடியும். சர்க்கரை நோயாளிகள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறும்போது நுரையீரலில் நீர் சேர்ந்து பிராண வாயுவை இழுக்கும் திறன் குறைந்து போகும். இவர்களால் சேர்ந்தார் போல் 10 வார்த்தைகள் பேச முடியாது. இப்படிப்பட்ட நிலையிலும், இந்த நுரையீரல் தேநீரை பருகி வரலாம். நல்ல முன்னேற்றம் தெரியும். தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது பூரண குணம் தெரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்!! (மகளிர் பக்கம்)
Next post மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை!! (மருத்துவம்)