சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோல்!! (மருத்துவம்)
*உலர்ந்த ஆரஞ்சுப் பழத்தோலின் புகைக்கு கொசுவை விரட்டும் சக்தி உள்ளது.
*ஆரஞ்சுப் பழத்தோலைப் பொடியாக்கி ரசத்துடன் சேர்த்துப் பாருங்கள் மணமும், சுவையும் கூடும்.
*ஆரஞ்சுப் பழத்தோலின் அடியில் படர்ந்திருக்கும் வெள்ளை நூல் போன்ற வஸ்துவை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் ½ லிட்டர் தண்ணீர் விட்டு 1 பழத்தோலை அரை மணி நேரம் வேக வைத்து பின் அந்த நீரைத் தனியாக எடுத்து வாய் கொப்பளிக்க, முகம் கழுவ வைத்துக்கொள்ளலாம். இது வாய், முகங்களிலிருந்து கிருமிகளை நீக்கும்.
*ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்தி, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், சிறிது பாதாம் பருப்பு சேர்த்து பொடியாக்கி, பன்னீருடன் முகத்தில் பூசிக்கொள்ள மிருதுவாக, பளபளப்பாக முகம் மாறும்.
*வேக வைத்த 1 ஆரஞ்சுப் பழத்தோலை ஒரு பாத்திரத்தில் பனங்கருப்பட்டி (அ) பனங்கற்கண்டில் ½ மணி நேரம் வேக வைத்து எடுத்து உலர்ந்தபின், அந்த முழுத்தோலையும் ஒரு வேளைக்கு சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரணத்திற்குத் தேவையான பித்த நீர் சுரக்க உதவும்.
Average Rating