மெனோபாஸ் காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களே… உங்களுக்காக! (மருத்துவம்)

Read Time:5 Minute, 17 Second

பெண்களுக்கு மெனோபாஸ் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான் என்றாலும், மாதவிலக்கு காலம் முடிகின்ற நேரத்தில் உடல் எடை கூடுதல், உடலில் வலி, வேதனை, செரிமானத்தில் மாறுபாடு, வயிறு உப்புசம், பசியின்மை அல்லது அதிகமாக ஜீரணம் ஆவது, கருப்பையில் கட்டிகள் என்று வியாதிகள் தரும் உபத்திரவங்களை விட இவை அதிக உபத்திரவங்களை கொடுக்கும். வாயு பிரச்சனை, வாயு கோளாறு, வயிறு உப்புச பிரச்சனைகள் கூட என்ன செய்தும் பலன் கொடுக்கவில்லை என்பார்கள். இதற்கான தீர்வாக இருக்கும் பூவரசன் பட்டை கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

பூவரசன் பட்டை கஷாயம்

செய்யத் தேவையான பொருட்கள்

பூவரசன் மரப்பட்டை சூரணம் 2 கிராம், மூக்கிரட்டை சூரணம் 2 கிராம், சுக்கு சூரணம் 2 கிராம்.

செய்முறை

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிகட்டி, காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

கருப்பை கட்டிகள்…

உடல் வீக்கம்!

பூவரசன் மரப்பட்டை கருப்பை கட்டிகள், உடல் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும். மாதவிலக்கு என்பது இயற்கை நிகழ்வாக இருந்தாலும் நிறைய பெண்களுக்கு மாதவிலக்கு ஆரோக்கியமான விஷயமாக இல்லை. உளுந்து மாவில் செய்த பலகாரங்கள், கேழ்வரகு உணவுகள், முருங்கை கீரை உணவுகள் இவைகளை பெண்கள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் கொல்லைப்புறத்தில் முருங்கை மரம் இருந்தாலும் கூட அதை பறித்து சமைத்து சாப்பிடுவது என்பதில் அதிக விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

100ல், 17 பெண்களுக்கு கருப்பை மண்டல நோய்

100ல், 17 பெண்களாவது கருப்பை மண்டல நோயால் அவதிப்படுவது, மாதவிலக்கு அதிகமாக போவது இல்லை மாதவிலக்கு ஆவதே இல்லை, உடல் வீக்கம் என்று அவதிப்படுகிறார்கள். 40 வயதில் இருந்து 50 வயது பெண்களில் 100ல் 4 பேராவது மாதவிலக்கு கோளாறுகளுக்காக கருப்பையை எடுத்து விடும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பார்கள்.

கருப்பை மண்டலத்தில் பிரச்சனை, கருப்பை கட்டிகள் அல்லது கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள் என்று சொன்னால், இரண்டு குழந்தைகள் இருக்கிறதா… எதுக்காக கஷ்டப்படறீங்க. பேசாமல் அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் அது புற்று நோயாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். புற்றுநோய் என்று உறுதிபடுத்தப்படாமலேயே கருப்பையை அகற்றி விடுவார்கள்.

எடுத்த எடுப்பில் கருப்பை அறுவை சிகிச்சையா?

முன்பெல்லாம் இம்மாதிரி தொந்தரவுகள் இருக்கிறது என்றால், கட்டியை சோதனைக்கு உட்படுத்தி, பின்னர் அதற்கான தீர்வு என்று வைத்தியம் சொல்லுவார்கள். ஆனால், இப்போது எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றி விடுகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட மூலிகை உணவு, கை வைத்தியம் அது இது என்று கருப்பை அகற்றும் சிகிச்சையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்.

நகர்ப்புற பெண்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் பக்க விளைவாக உடல் வீங்கி விட்டது என்று வருவார்கள் கருப்பை மண்டல பிரச்சனைகள், பக்க விளைவுகள் என எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த பூவரசன் மரப்பட்டை கஷாயம். ப்ரீ மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது இந்த கஷாயம். கருப்பை கட்டி, கருமுட்டைப் பை நீர்கட்டிகள் இவற்றுக்கு பூவரசன் பட்டை கஷாயத்தை 100 நாள் பருகிவிட்டு பின்னர் சோதனை செய்தால் கட்டிகள் கரைந்து போயிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40+ பெண்களுக்கு ரீவைண்ட் பட்டன் இளமையை மீட்டெடுக்கும் ரீஜெனரேடிவ் சிகிச்சை!! (மருத்துவம்)
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)