இத்தாலியில் ரெயில்கள் மோதலில் 2 பேர் பலி; 60 பேர் காயம்
Read Time:56 Second
இத்தாலியில் ரோம் நகரின் சுரங்க ரெயில் பாதையில் ஒரு ரெயில் வேகமாக வந்தது.அது பியாசா விட்டோரியா என்ற ரெயில் நிலையத்தில், நின்று கொண்டு இருந்த இன்னொரு ரெயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ரெயில் பெட்டியின் இடிபாடுகளுக்கு இடையில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீஅணைப்புப்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சிவப்பு விளக்கை கவனித்து அந்த இடத்தில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தாதது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.