சூடான் டார்பூரில் மீண்டும் கிளர்ச்சிக்கு அழைப்பு
Read Time:1 Minute, 27 Second
சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள டார்புர் மாகாணத்தில், கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த இரண்டு பிரதான கிளர்ச்சிக் குழுக்கள், தங்களது முன்னாள் கூட்டாளிகளை மீண்டும் கிளர்ச்சியில் சேருமாறு கோரியுள்ளன. தேசிய மீட்புக் கூட்டணி என்ற பெயரில் டார்புரில் ஒரு புதிய அரசு எதிர்ப்பு கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் தலைவர்களில் ஒருவரான கலில் இப்ராஹிம் கூறினார்.
அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒரே ஒரு கிளர்ச்சித் தலைவரான, மின்னி மின்னாவி தலைமையிலான சூடானிய விடுதலை முன்னணியை, தங்களது அணியில் மீண்டும் சேருமாறு அவர் வலியுறுத்தினார்.
மே மாதம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மின்னாவியின் குழு சுடானிய இராணுவத்துடன் டார்புரில் இணைந்தது மின்னாவிக்கு கார்டூம் அரசில் அரசு பதவி ஒன்று வழங்கப்பட்டது.