2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி
Read Time:46 Second
சூடான் நாட்டில் நைல் நதியில் 2 படகுகள் மோதிக்கொண்டதில் 50 ராணுவ வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தெற்கு பகுதியில் உள்ள மலாக்கள் நகரில் இருந்து அவர்கள் ஆற்றங்கரை அருகே உள்ள புதிய முகாமுக்கு அனுப்பப்பட்டபோது இந்த விபத்து நடந்தது. ஆற்றில் மூழ்கிய படகில் 109 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் 50 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவித்த போதிலும் உள்ளூர் மக்கள் கூறுகையில் 75 பேர் இறந்தனர் என்று கூறுகிறார்கள்.