ரத்தத்தை தூய்மையாக்கும் புதினா!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 28 Second

*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் ஒரு ஸ்பூன் காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

*ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

*புதினாவைக் காய வைத்துப் பொடியாக்கி அதில் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.

*புதினா, கிராம்பு, சோம்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*புதினா இலைச்சாறுடன் பச்சைக் கற்பூரம் கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும்.

*புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம் குறையும்.

*புதினா இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசாயனத் தன்மையை முறிக்கும் நாட்டுச்சர்க்கரை !! (மருத்துவம்)
Next post இந்த மண்ணில் வாழ இவர்களுக்கு முழு உரிமையுண்டு! சுதா ஆத்மராஜ்!! (மகளிர் பக்கம்)