ரசாயனத் தன்மையை முறிக்கும் நாட்டுச்சர்க்கரை !! (மருத்துவம்)
நாம் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயனத் தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றுதான் ‘நாட்டுச்சர்க்கரை.’ அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.
*நாட்டுச்சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்கும்.
*வௌ்ளைச் சர்க்கரை இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும். நாட்டுச்சர்க்கரை குடல்கள்வலுவடைந்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
*கரும்புச்சாறு மற்றும் நாட்டுச்சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு குறையும்.
*உடலில் ஏற்படும் தொற்றை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
*நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து காரணமாக உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும். நாட்டுச்சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதால் கொழுப்பு சேர்மானம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
*வெள்ளை சர்க்கரையிலுள்ள ரசாயனங்கள், உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். நாட்டுச்சர்க்கரை இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
Average Rating