தும்மலைப் போக்கும் கற்பூரவல்லி தேநீர்!! (மருத்துவம்)
முன்பெல்லாம் தும்மினால் ஆயுசு நூறு என்று மகிழ்ந்த சமூகம், இன்று யாரேனும் தும்மினால் கொலைக் குற்றவாளியைப் போல் பார்க்கிறது. கொரோனாவின் லீலைகளில் இதுவும் ஒன்று. தும்மல் உங்களை சங்கடப்படுத்துவதாக நினைத்தால் கற்பூரவல்லி தேநீரை சுவைத்துப் பாருங்கள். இதற்கு கற்பூரவல்லியுடன் சிறிது தேன் மட்டும் போதும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன், கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் சேகரியுங்கள்.
அவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கியபிறகு கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி தேன் சேர்த்தால் கற்பூரவல்லி தேநீர் தயார். இந்த தேநீரை தினமும் உணவுக்கு முன்பு எடுத்து வர தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலை நீரேற்றத்தின்போதுதான் கடுமையான வலி, அடிக்கடி தும்மல் இருக்கும். மூக்கில் அரிப்பும் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி தேநீர் அற்புதமான பலனை தருகிறது.
Average Rating