அரசு மரியாதையுடன் ஸ்ரீவித்யா உடல்தகனம்: நடிகர்-நடிகைகள் அஞ்சலி

Read Time:12 Minute, 27 Second

srividya.jpgதமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா அழகாகவும் வசீகர நடிப்பாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53. ஸ்ரீவித்யாவின் தாயார் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தந்தை விக்ரம் கிருஷ்ணமூர்த்தி சிறு வயதில் பரத நாட்டியம் கற்று மேடையில் ஆடிவந்த ஸ்ரீவித்யா 13 வயதில் திருவருட்செல்வர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

1968-ல் மூன்றெழுத்து படத்தில் `காமெடி’ பாத்திரத் தில் நடித்தார். 1970-ல் கஸ்தூரி திலகம் என்ற படத்தில் நடித் தார். கே.பாலச்சந்தர் இயக் கிய சொல்லத்தான் நினைக் கிறேன், படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு நடித்த அபூர்வ ராகங்கள் படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் தான் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமானார்.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தார். கடந்த சில வருடங்களாக முன்னணி இளம் நடிகர்கள் பலருடன் ஸ்ரீவித்யா நடித்தார். இவரது கடைசி படம் லண்டன் ஒரு வருடத்துக்கு முன்பு இப்படம் வெளியானது. கமலஹாசனின் அம்மாவாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீவித்யா மலையாள தயாரிப்பாளர் ஜார்ஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சென்னை மகாலிங்க புரத்தில் உள்ள வீட்டுக்கு இருவரும் சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீவித்யா தனது பணத்தில் அந்த வீட்டை கட்டியதாக கூறினார். இறுதியில் சுப்ரீம் கோர்ட்டு ஸ்ரீவித்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது.

கடைசியாக அம்மா தம்பு ராட்டி என்ற மலையாள டி.வி.தொடரில் ஸ்ரீவித்யா நடித்து வந்தார். 200 வார தொடராக இதை எடுக்க தயாரிப்பாளர் திட்டமிட்டார். ஆனால் 45-வது தொடர் நடித்த போது ஸ்ரீவித்யாவுக்கு உடல்நலம் பாதித்தது. அதன் பிறகு தொடரையே நிறுத்தி விட்டனர்.

ஸ்ரீவித்யாவை புற்று நோய் தாக்கியது. தெரிந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பெங்களூரில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அதன் பிறகு கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் தங்கினார்.

நோய் முற்றியதால் திரு வனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஉத்திராடம் திருநாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் கமலஹாசன் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். ஸ்ரீவித்யா உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. நேற்று அவருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஸ்ரீவித்யாவின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள வி.ஜே.டி. மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரள அமைச்சர் திவாகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் பாலச்சந்திர மேனன், கலா பவன் மணி, நடிகை மேனகா, திருவனந்தபுரம் மேயர் ஜெயன்பாபு, பன்னியன் ரவீந் திரன் எம்.பி. மற்றும் நடிகர் -நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கேரள முதல்-மந்திரி அச்சு தானந்தன், எதிர்க்கட்சித் தலைவர் உமன்சாண்டி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ஸ்ரீவித்யாவின் உடல் இன்று பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருவனந்த புரத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த நடிகை ஸ்ரீவித்யா, நடிகர் கமலஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஸ்ரீவித்யா திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது கமலஹாசன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்ரீவித்யா மறைவு குறித்து கமலஹாசன் கூறியதாவது:-

`நான் மட்டுமல்ல ஸ்ரீவித்யாவும் கடந்த ஒருவருடமாக இப்படி ஒரு நிலைமையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். தைரியமாக மரணத்தை தழுவியவர் எனது தோழி ஸ்ரீவித்யா. அவரது அசாதாரணமான தைரியம் தான் இதற்கு காரணம். ஒரு நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன்.”பொண்ணுக்கு தங்க மனசு” கண்ணுக்கு நூறு வயசு” என்ற கண்ணதாசன் பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதல்-மந்திரி அச்சுதானத்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மக்கள் மனதில் இடம் பெற்ற ஒரு நடிகை ஸ்ரீவித்யா. அவரது மரணம் கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மக்களால் ஒரு போதும் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

நடிகர் கலாபவன்மணி கூறுகையில் “அன்பாக உபசரித்து வரவேற்கும் அந்த சிரித்த முகம் இப்போதும் அப்படியே உள்ளது. அவர் மறந்தாலும் அவரது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளது” என்றார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் காளை, விஜயகுமார், மனோரமா, சிம்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் ஸ்ரீவித்யா மறைவுக்கு அனுதாப தந்தி அனுப்பி உள்ளனர்.

`சினிமா, சீரியலை பாதிக்கும் சிகிச்சை எனக்கு வேண்டாம்’: டாக்டரிடம் அடம்பிடித்த ஸ்ரீவித்யா

நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் கூறியதாவது:-

நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கேன்சர் 3 வருடத்துக்கு முன்பே பாதித்துள்ளது. அது எஸ்.டி.ï மருத்துவமனையில் பரிசோதித்த போது உறுதி செய்யப்பட்டது. முதுகு தண்டில் தான் கேன்சர் பாதிப்பு இருந்தது. இது தொடர்பான சிகிச்சை பற்றி அவரிடம் பேசியபோது நான் சினிமாவிலும், சீரியலிலும் பிசியாக இருக்கிறேன். அதற்கு பாதிப்பு ஏற்படும் சிகிச்சை எனக்கு வேண்டாம் எனது தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அந்த சிகிச்சையும் எனக்கு வேண்டாம்.

உடல்நிலைமிகவும் மோசமடைந்ததால் தன்னை பார்க்க வந்தவர்களை தவிர்த்தார். கடந்த 1 மாதத்துக்கு முன்பு கேன்சர் தீவிரமடைந்தது தெரிய வந்தது. கேன்சர் பாதிப்பு நுரையீரலையும் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பித்தப்பை பாதிப்பு, வயிற்றில் ரத்தக்கசிவு, சிறுநீரகம் பாதிப்பு இதய செயல்பாடுகளில் குறை ஏற்பட்டது.

மரணத்தை தழுவ நேரிடுமோ என்ற கவலையை விட அவருக்கு `அம்ம தம்பு ராட்டி’ சீரியல் பாதியில் நின்று விட்டதே என்ற கவலை அதிகம் இருந்தது. அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே அவர் அடிக்கடி கூறி வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

1953 முதல் 2006வரை ஸ்ரீவித்யா

1953 ஜுலை மாதம் 24-ந்தேதி விகடன் கிருஷ்ணமூர்த்தி-வசந்த குமாரிக்கு மகளாக பிறந்தவர் ஸ்ரீவித்யா அண்ணன் சங்கரராமன்.

நடனக்கலையில் ஆர்வம் மிகுந்த ஸ்ரீவித்யா நடனம் கற்று 1964-ம் ஆண்டு 7-ந்தேதி தனது நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார். ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு டெல்லியில் தனது தாய் பாட 2-வது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

பின்னர் ஸ்ரீவித்யாவுக்கு சினிமா ஆசை வந்தது. இதைத் தொடர்ந்து தனது 13-வது வயதில் `திருவருட்செல்வன்’ என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்தார். தொடர்ந்து `பட்டாம்பிக்கவல’ என்ற மலையாள படத்தில் நடித்தார். இதில் சத்யன் ஹீரோ.

1979-ம் ஆண்டுகளில் இடவழிவிடு, மீன்பூச்ச ஆகிய படங்களில் ஸ்ரீவித்யா நடித்து மலையாள முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தமிழ்மொழியில் அவர் பிரபலமானது பாலச்சந்தரின் `அபூர்வராகங்கள்’ என்ற படத்தில் இந்திமொழி பங்களிலும் தலை காட்டிய ஸ்ரீவித்யா இடை இடையே சங்கீத அரங்கேற்றமும் செய்தார். சாய்பாபா பக்தரான ஸ்ரீவித்யா பஜனை பாடல்களும் பாடியுள்ளார்.

கிழிக்கூடு, இதயம், ஒரு கோயில், ஆதாமின் விலா எலும்பு, விற்பனைக்கு உண்டு, கொச்சுமுல்ல, அனியத்தி பிராவு ஆகிய படங்கள் மலையாளத்தில் ஸ்ரீவித்யா நடித்து புகழ் பெற்றது இந்தியில் ரிஷிகேஷ் முகர்ஜி தயாரித்த `அர்ஜ×ன் பாஸாயிட்டான்’ என்ற படம் தான் முதல் படம்.

1978-ம் ஆண்டு தயாரிப்பாளர் ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்த திருமணம் நடந்தது.

1999-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இருந்த போதிலும் தனியாக இருந்து ஸ்ரீவித்யா பல மொழி படங்களில் நடித்துள்ளார். இது வரை 6 மொழியிலும் 850 படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக “அம்ம தம் புராட்டி” என்ற மலையாள சீரியலில் நடித்தார். அப்போது தான் அவருக்கு கேன்சர் நோய் தாக்கியது. எனவே அதில் நடிப்பதை நிறுத்தினார். அந்த சீரியலும் நிறுத்தப்பட்டது. 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி அவர் மரணம் அடைந்தார்.

sreeVidya-husbend.jpgsrividya.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
Next post நாகர்கோவில் மோதலில் 35விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது