நாகர்கோவில் மோதலில் 35விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது
Read Time:1 Minute, 15 Second
இலங்கையில், முல்லைத்தீவு- சாலை பகுதியில் இருந்து, வடகடல் பகுதியை நோக்கி நகர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய சமரில் சுமார் 35க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், 2 இலங்கைக் கடற்படையினர் காயமடைந்ததாகவும் இலங்கை அமைச்சரும் இராணுவ விவகாரங்கள் தொடர்பாக பேசவல்லவருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். விடுதலைப்புலிகளின் படகுகளுடன் நாகர்கோயில் பகுதியில் இந்த மோதல் நடந்ததாகவும், இதில் 3 கரும்புலிப்படகுகள் உட்பட 15க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் சம்பந்தப்பட்டதாகவும், இந்த மோதலில் விடுதலைப்புலிகளின் 2 படகுகள் முற்றாக சேதமாக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.