அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் பான் கி மூன்
Read Time:1 Minute, 25 Second
ஐ.நா. பொதுச்செயலாளராக பதவியேற்பதற்கு முன் தென் கொரியா வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சரான பான் கி மூன் ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி மாதம் 1 ம் தேதி அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் தென் கொரியா திரும்பினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸýடன் பேச்சு நடத்துவதற்காக அவர் நாடு திரும்பினார்.
பின்னர் அவர் அதிபர் ரோ மூ யூனைச் சந்தித்துப் பேசினார். அப்போது வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அதிபரிடம் தெரிவித்தார். நவம்பர் 15 ம் தேதி மீண்டும் நியூயார்க் திரும்பப் போவதாகவும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாராக வேண்டும் என கூறியதாகவும் அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.