இப்போதைக்கு தூதுவளைதான் தேவை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 33 Second

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

* தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய், எலும்பு நோய், காது நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

* தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.

* தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும்.

* இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.

* தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும்.

* தூதுவளை பற்றிய அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பல, அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி, ஈரலைப் பாதுகாக்கும் குணம் இருப்பதாக நிரூபித்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இருப்பதாக கூறுகின்றன.

* தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்னை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி!! (மகளிர் பக்கம்)
Next post பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்!! (மருத்துவம்)