விமானம் விழுந்து நொறுங்கி 15 ராணுவ வீரர்கள் பலி
Read Time:55 Second
ரஷியாவில் இருந்து பிரிந்த நாடு, உஸ்பெக்கிஸ்தான். இங்கு உள்ள தாஷ்கண்ட் நகரில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. இது ராணுவப்பயிற்சி விமானம் ஆகும். இதில் ராணுவ வீரர்கள் 13பேரும், சிப்பந்திகள் 2 பேரும் இருந்தனர். அப்போது வானிலை மோசமாக இருந்தது. சூறாவளிக்காற்றும் வீசியது. விமானத்தை அருகில் உள்ள விமானநிலையத்தில் தரைஇறக்க விமானி முயற்சி செய்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ராணுவ வீரர்கள் 13 பேரும் சிப்பந்திகள் 2 பேரும் பலியானார்கள்.