மட்டக்களப்பில் இலங்கை காவல்த்துறையினர் ஒருவர் சுட்டுக் கொலை.
Read Time:45 Second
நேற்று மாலை 3 மணியளவில் கல்லடி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் காவற்துறையில் பணியாற்றி வரும் தமிழரான ஆரோக்கியம் பிரசன்னா (வயது 28) என்பவர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் துப்பாக்கிப்பிரயோக த்தில் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு பிரதான காவல் தலைமையகத்தில் கடமையாற்றி வந்த இவரது சொந்த இடம் மட்டக்களப்பு நாவலடி என்பதும் குறிப்பிடத்தக்கது.