செரிமானத்தை சீராக்கும் ஓமம்!(மருத்துவம்)

Read Time:2 Minute, 31 Second

*வயிற்றுவலி ஏற்பட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
*நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.

*1/2 டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.

*தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

*ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சி’யில் பொடிக்கவும். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால், வயிறு மந்த பிரச்னை நீங்கும்.

*அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள், ஓமம் பொடி இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைக்கவும். மறுநாள் காலை அதை நன்கு கரைத்து 15 நாள் தொடர்ந்து குடித்தால், தொப்பை காணாமல் போய்விடும்.

*ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது மோரில் கலந்து குடித்தால், நெஞ்சு சளி வெளியேறும்.

*சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால் சோர்வு நீங்கும்.

*பல்வலி இருந்தால், ஓம எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக்கொண்டால் பல்வலி மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்!(மகளிர் பக்கம்)
Next post செரிமானத்தை தூண்டும் தான்றிக்காய்!! (மருத்துவம்)