வெங்காயத்தாளில் இத்தனை விஷயமா?(மருத்துவம்)

Read Time:1 Minute, 58 Second

பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு(Palandu) என குறிப்பிடப்படுகிறது.

  • ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து அதனை நீர்த்துப் போக செய்கிறது.
  • ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள் வராது.
  • ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப் பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன் வளர்க்க உதவும்.
  • மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் இதனால் சரி செய்யப்படுகிறது. பக்கவாதம் ஏற்படுவதையும் வெங்காயத்தாள் தடுக்கிறது.
  • வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90%குறையும்.
  • காய்ச்சலைக் குணப் படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
  • காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்.
  • வெங்காயத் தாளினை கூட்டாகவோ, சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் தின்றால்தான் என்ன?!(மருத்துவம்)
Next post 1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)